Tuesday, October 16, 2007

நட்பு...

விழுகையில் தாங்குவது
மட்டுமல்ல நட்பு...
விழுகையில் தாங்க நானிருக்கிறேன் என்று
முதலில்
எழவைப்பதே

நட்பு!!!!

பிராத்தனை.........

உனக்கான
என் பிராத்தனைத்தட்டில்
கொத்துக்கொத்தாய்ப்
பூக்களை
வைத்தேன்........
கடைசியில்-
என் கோரிக்கை
வைக்க
இடமில்லை.................

இளைய சமுதாயமே...

ஏ இளைய சமுதாயமே!!!
நிமிர்ந்து நில்...
தொடர்ந்து முன்னேறு.....

இங்கே பார்....
ஒரு நாள் ஆயுளைக் கொண்ட ரோஜா
எவ்வளவு அழகாக
புன்னகை புரிந்து
மலர்ந்தாடுகிறது என்று........

கவிதை...

என்
கவிதைகள்தான்
எத்தனை அழகு
என்ற என் நினைப்பில்
கல்லெறிந்ததடி


உன் சிரிப்பு.............