உன் ஈர தென்றல் பார்வை
என் நினைவு மேகங்களை கலைத்ததால்
பொழியும்
இந்த கவிதை மழைக்குப் பெயர்தான்
--காதலா???
Monday, April 21, 2008
Thursday, April 17, 2008
நட்பு...!!!
உன்னிடமிருந்து
எதிர்பார்ப்பதற்கும்
என்னிடமிருந்து
கொடுப்பதற்கும்
இதைவிட உயரிய
பொருள் இருக்கிறதா என்ன...?
எதிர்பார்ப்பதற்கும்
என்னிடமிருந்து
கொடுப்பதற்கும்
இதைவிட உயரிய
பொருள் இருக்கிறதா என்ன...?
Wednesday, April 16, 2008
என் பேனா...!!!
என் பேனா தன் வாழ்வை
முடித்துக் கொள்ளும் கடைசி நேரத்தில்
ஆசையுடன் ஒரு கோரிக்கை வைத்தது..!!!
'என் உயிர் பிரிகையில்
தேன் சொரியும் ஒரு கவிதைக்கு
உயிர் கொடுக்க வேண்டுமென..'
அழகிய வெண்தாளை எடுத்து
எழுதினேன் உன் பெயரை...!!!
பேனா தெரிவிக்கும் நன்றியையை
இதோ.. என் விரல் வழியில் உயிர் உணர்கிறது...!!!
முடித்துக் கொள்ளும் கடைசி நேரத்தில்
ஆசையுடன் ஒரு கோரிக்கை வைத்தது..!!!
'என் உயிர் பிரிகையில்
தேன் சொரியும் ஒரு கவிதைக்கு
உயிர் கொடுக்க வேண்டுமென..'
அழகிய வெண்தாளை எடுத்து
எழுதினேன் உன் பெயரை...!!!
பேனா தெரிவிக்கும் நன்றியையை
இதோ.. என் விரல் வழியில் உயிர் உணர்கிறது...!!!
Thursday, April 10, 2008
சூரியகாதலன்...!!!
நிலவு மணாளனின்
பிரிகையால் அல்லி ராணிகள்
துயருற்று முகம் கூம்பி இருக்க
சூரிய காதலனின்
வருகையால் செந்தாமரையாய் நான்
அகமும் முகமும் மலர்கிறேன்...
நிலவானது சூரியனிடம்
ஒளி பெற்று பிரதிபலிப்பதைப் போல
இவ்வுலகின் அனைத்து ஆடவர்களும்
உன் குண பண்புகளை
பிரதிபலிக்க முயன்று தோற்கிறார்கள்..
யாராலும் உன்னைப்போல் இயங்க இயலாது..
ஆம்..
நீ ஒரு சூரியகாதலன்...!!!
பிரிகையால் அல்லி ராணிகள்
துயருற்று முகம் கூம்பி இருக்க
சூரிய காதலனின்
வருகையால் செந்தாமரையாய் நான்
அகமும் முகமும் மலர்கிறேன்...
நிலவானது சூரியனிடம்
ஒளி பெற்று பிரதிபலிப்பதைப் போல
இவ்வுலகின் அனைத்து ஆடவர்களும்
உன் குண பண்புகளை
பிரதிபலிக்க முயன்று தோற்கிறார்கள்..
யாராலும் உன்னைப்போல் இயங்க இயலாது..
ஆம்..
நீ ஒரு சூரியகாதலன்...!!!
Thursday, April 3, 2008
அப்பா..!!!
இவனின் சிறுபருவத்தில்
அவர் காட்டிய அன்பு..
புரியாத வினாக்களுக்கு
அவரளித்த விளக்கம்..
நோயுற்ற நாட்களில்
அவரின் அரவணைப்பு..
பள்ளி பருவத்தில்
அவரின் கண்டிப்பு..
மதிப்பெண் குறைந்ததில்
அவரிடம் பட்ட அடி..
கல்லூரியில் சேர்க்க
அவர் பட்ட கஷ்டம்..
வேலை சிபாரிசுக்கு
அவர் அலைந்த நாட்கள்..
திருமணம் செய்விக்க
அவர் பெற்ற கடன்..
பெரும் கடமையை முடித்ததில்
அவரடைந்த ஆனந்தம்..
பேரபிள்ளைய கொஞ்சுகையில்
அவரின் பரவசம்..
இதோ..
இன்று ஒரு தந்தையின்
கடைமையை இவன் ஆரம்பித்திருக்கிறான்..
தந்தையை காண முதியோரில்லம்
செல்கிறான் மகனோடு..
சுருக்கம் விழுந்த முகத்தில்
வேதனை ரேகைகள் ஓடுகின்றன..
ஆனந்தமாய் அரைமணி நேரம் கழித்து
விடை பெறுகையில் சொன்னார்..
மகனே..
ஒரு கடமை மிஞ்சியிருக்கிறது..
உனக்கு கொடுக்க வேண்டிய
பொருள் ஒன்று இருக்கிறது..
இந்த கைத்தடியை வைத்துக்கொள்
பிற்காலத்தில் உதவுமென்றார்..
கண்களில் அருவி வழிய
தந்தையின் அன்பை உணர்கிறான்
இவன் இப்பொழுது...
ஒன்றும் புரியாத பேரனோ
இருவரையும் மாறி மாறி பார்க்கிறான்...
அவர் காட்டிய அன்பு..
புரியாத வினாக்களுக்கு
அவரளித்த விளக்கம்..
நோயுற்ற நாட்களில்
அவரின் அரவணைப்பு..
பள்ளி பருவத்தில்
அவரின் கண்டிப்பு..
மதிப்பெண் குறைந்ததில்
அவரிடம் பட்ட அடி..
கல்லூரியில் சேர்க்க
அவர் பட்ட கஷ்டம்..
வேலை சிபாரிசுக்கு
அவர் அலைந்த நாட்கள்..
திருமணம் செய்விக்க
அவர் பெற்ற கடன்..
பெரும் கடமையை முடித்ததில்
அவரடைந்த ஆனந்தம்..
பேரபிள்ளைய கொஞ்சுகையில்
அவரின் பரவசம்..
இதோ..
இன்று ஒரு தந்தையின்
கடைமையை இவன் ஆரம்பித்திருக்கிறான்..
தந்தையை காண முதியோரில்லம்
செல்கிறான் மகனோடு..
சுருக்கம் விழுந்த முகத்தில்
வேதனை ரேகைகள் ஓடுகின்றன..
ஆனந்தமாய் அரைமணி நேரம் கழித்து
விடை பெறுகையில் சொன்னார்..
மகனே..
ஒரு கடமை மிஞ்சியிருக்கிறது..
உனக்கு கொடுக்க வேண்டிய
பொருள் ஒன்று இருக்கிறது..
இந்த கைத்தடியை வைத்துக்கொள்
பிற்காலத்தில் உதவுமென்றார்..
கண்களில் அருவி வழிய
தந்தையின் அன்பை உணர்கிறான்
இவன் இப்பொழுது...
ஒன்றும் புரியாத பேரனோ
இருவரையும் மாறி மாறி பார்க்கிறான்...
Subscribe to:
Comments (Atom)
