Monday, December 31, 2007

உயிரே..

உன்னை உன்னை

நிலவே என்றேன்..!! நிலவே என்றேன்..!!
அம்மாவாசை ஆனாய்.... என் வாழ்வின் பெளர்ணமியானாய்...
மலரே என்றேன்..!! மலரே என்றேன்..!!
உதிர்ந்து போனாய்.... மணம் பரப்பினாய்....
அறிவே என்றேன்..!! அறிவே என்றேன்..!!
மூடனாக்கினாய்.... அறிஞனாக்கினாய்....
அன்பே என்றேன்..!! அன்பே என்றேன்..!!
இதயம் கொன்றாய்.... உனதன்பில் திளைக்க வைத்தாய்....
மின்னலே என்றேன்..!! மின்னலே என்றேன்..!!
நொடியில் மறைந்தாய்.... ஒளியையை தந்தாய்....
மயிலே என்றேன்..!! மயிலே என்றேன்..!!
சிறகொடித்தாய்.... நாட்டியமாடினாய்....
குயிலே என்றேன்..!! குயிலே என்றேன்..!!
ஊமையாக்கினாய்.... பாடகனாக்கினாய்....
வான‌மே என்றேன்..!! வான‌மே என்றேன்..!!
இடியாய் விழுந்தாய்.... மழையாய் பொழிந்தாய்....
நிறமே என்றேன்..!! நிறமே என்றேன்..!!
வெற்றிடமானாய்.... வானவில் ஆனாய்....

உன்னை..... உன்னை.....
உன்னை..... உன்னை.....

உயிரே என்று சொல்லவா? உயிரே என்று சொல்லவா?
அய்யோ..!! என்னை விட்டு என்னுள்
போய்விட்டால்...??? ஒன்றிவிடுகிறாயா?

என் தாய் தந்தையரை யார் காப்பாற்றுவது?? நீ யாரோ, எவளோ அல்ல...
வேண்டாம்... என்னவள்..!!
நீ யாரோ.. எவளோ...!!! என் உயிரானவள்...!!!!!!

(Select the above kavithai.. And read the new one alone... )

நட்பு

கண்களிலிருந்து
வழியும் கண்ணீர்
கன்னப்பரப்பை ஈரப்படுத்துமுன்
தன் அன்பினால்
அணைகட்டுவதே

நட்பு !!!

உன் அன்பு..

உன்னை நிலவுடன்
ஒப்பிடவா?
வேண்டாம்...

நிலவிற்கு
தேய்வதும் வளர்வதுமாய்
இரு உருவங்கள் ..!!

உன் அன்பிற்கு அது இல்லை...
என்றும் தேயாத‌
ஒற்றை முழு உருவம் போல்...!!!

ஞானி

மனம் ஒரு மாயக்கண்ணாடி..!!
ஆம்..
ஆயிரம் விதமான முகங்களை
ஒரே சமயத்தில்
பிரதிபலிக்கிறது...

தன் உண்மை முகத்தை
தானே பார்க்க முடிவதில்லை..

இதில் வென்றவர்கள்தான்
ஞானி ஆகிறார்கள் போலும்..!!!!!

அரசியல்வாதி

தனது அரியணை மோகத்திற்காகவும்
பதவி ஆசைக்காகவும்
சில தலைமுறைகளின்
முன்னேற்றத்தை
முளையிலேயே
கிள்ளி எறியும்
பச்சோந்திகள்... !!!

ஆயுள் முழுவதையும்
அரசியலில் கழித்து
தன் கட்சியின் கொள்கை
தானே அறியாமல்
மண்ணில் விழுந்து
மறையும் மூடர்கள்...!!!

Wednesday, December 19, 2007

தனிமை

நிலாமகள் வானவீட்டில் புகுந்து
நட்சத்திர தோழிகளுடன்
கண்ணாமூச்சி விளையாடுகிறாள்..

அதோ !!
மறைந்து விட்டாள் மேகத்திரையின் பின்னே...

அந்த மெல்லிய இளங்காற்று வீசும்
இரவு பொழுதில் மொட்டை மாடியில்
படுத்துக் கொண்டு நானும் தான்
அவளை கண்டு பிடிக்க முயற்ச்சிக்கிறேன்.....

அருமையான விளையாட்டு..

யார் சொன்னது?
தனிமை கொடுமை என்று..