Wednesday, August 20, 2008

விழி வியூகம்


விழிகளால் வியூகம் வகுத்து,
புன்னகையால் என் மனக்கோட்டையில் நுழைந்து,
மெளனத்தால் என்னைக் கொன்று,
காதல் போர்க்களத்தில் நிதம் நிதம் வெற்றி பெற்று,

அன்பே...
நீ அபிமன்யுவையும் மிஞ்சி விட்டாய்...
அவன் தன் சக்கரவியூகத்தில் சிக்குண்டு மாண்டான்..

நானோ உன் சித்திரவிழி வியூகத்தில்
விழுந்து செத்து கொண்டிருக்கிறேன்....