Wednesday, August 20, 2008

விழி வியூகம்


விழிகளால் வியூகம் வகுத்து,
புன்னகையால் என் மனக்கோட்டையில் நுழைந்து,
மெளனத்தால் என்னைக் கொன்று,
காதல் போர்க்களத்தில் நிதம் நிதம் வெற்றி பெற்று,

அன்பே...
நீ அபிமன்யுவையும் மிஞ்சி விட்டாய்...
அவன் தன் சக்கரவியூகத்தில் சிக்குண்டு மாண்டான்..

நானோ உன் சித்திரவிழி வியூகத்தில்
விழுந்து செத்து கொண்டிருக்கிறேன்....

Monday, July 7, 2008

எழுத்தாளன்....


இவன் எழுதுகோலில் ஏறும்
ஒரு சொட்டு மைத்துளி
ஓராயிரம் பேர்களின்
தலையெழுத்தை மாற்றவல்லது..!!!
அது நாட்டில் ஊடுருவி
நடமாடும் புல்லருவிகளை
தினம் தினம் அறுவடை
செய்யும் போர்வாள்...!!!
அது அரசியல் ஆட்சியை
அடியோடு தடம் புரட்டி
புடம் போடும்
ஆற்றல் வாய்ந்த உலைத்தீ...!!!
பிடித்திருக்கும் அவனது
கையையும் கூர்பார்க்கும்
இருமுனைக் கத்தி...!!!
உண்மை எழுதும் ஒரு எழுத்தாளனின்
உயிர்மூச்சு காற்றில் உலவும்வரை
நல்லவர் வீழ்ந்து தீயவர் எழும்
காலம் என்றும் வரப்போவதில்லை...!!!

Friday, July 4, 2008

கவிகரு...



மேகங்கள் முட்டி சூரியன்
தேய்ந்துவிட்டதென்பதைப் போல...
கருமி தானத்தின் பெருமையை
எடுத்துச் சொல்வதைப் போல...
பெண் தனதடிமையென மைந்தன்
தாயிடம் கூறுவதைப் போல...
பித்த மயக்கத்திற்கு மலடி
மகிழ்ச்சியடைவதைப் போல...
வாய்வார்த்தையிலே மட்டும் வீரம்காட்டும்
கோழை ஆடவனைப் போல...

கருவற்ற கவிதை பொருளற்றது.. பயனற்றது..

அது கவிஞனாகிய தாய் பிரசவிக்கும்
உயிரற்ற குழந்தையைப் போன்றது...!!!

Thursday, July 3, 2008

மரத்தாய்...


உயிர் ஆதார சுவாச காற்றைத் தருகிறாள்..
பசி தீர்க்க கனிகளால் உணவளிக்கிறாள்..
தன்மடி நிழலால் குளிரச்செய்கிறாள்..
மன அமைதியைத் தருகிறாள்..
பூந்தென்றலால் மகிழ்விக்கிறாள்..
தஞ்சம் புகுந்தவர்க்கு வஞ்சம் பாராதவள்...

தாயிலும் மாற்றாந்தாய் இங்குண்டு...

இருப்பின் அனைவருக்கும் அனைத்தும் நல்கும்
இவள் ஓர் இணையற்ற தாயாகிறாள்..

ஆயினும் இங்குபோல் எங்கும்
தாயைக் கொல்லும் மக்களை யாம் கண்டதில்லை...!!!


Tuesday, June 24, 2008

நாட்டியப் போட்டி..!!!

போட்டியில்
பங்கு கொண்டால்
அனைத்து பரத கலைஞர்களையும்
வென்று விடுமடி
உன் கண்கள்..

என்ன அழகாக‌
நாட்டியமாடுகிறது...!!!

வேதனை..

பெண்ணே...!

உன் புருவவில் வளைத்து
விழி அம்புகளை வீசுகையில்
வலித்தாலும்

மனம் ஏனோ
அந்த சுக வேதனையையே
விரும்புகிறது...!!!

கண்கள்..

காதலை இலவசமாக
இடம் மாற்றும்
அஞ்சலகம்...!!!