Friday, May 2, 2008

கவிதையைத் தேடி...



கவிதை எழுத நல்சூழல் தேடி
இளமாலையில் பூங்காவின்
ஒரு மரத்தடியில் அமர்ந்தேன்...

கவிகரு தேடி கண்கள் அலைபாய்ந்தன...

மரத்திலிருந்து மெளன மொழி பேசிக்கொண்டே
உதிரும் பூவரசம் பூக்கள்...

மெல்லமாய் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே
இதழ்களை விரிக்கும் ரோஜா மொட்டு...

தன்னுடன் அன்றவிழ்ந்த மலர்களின் மணத்தையும்
இழுத்துக்கொண்டு உலவும் தென்றல்...

ஏதோ நினைவுகளில் ஆழ்ந்து தன்
வெண்தாடியைத் தடவும் முதியவர்...

பட்டுப்பூச்சிகளாய் ஓடி விளையாடித்
திரியும் மழலைகள்..

கரிய நிழல் அடர்ந்த மரங்களைத்
தேடும் காதலர்கள்...

என்ன எழுதுவதென்றே புரியாமல்
சில நேரம் சிந்தனையில் கழித்து
மெல்ல எழுந்து மெளனமாய் நடக்க ஆரம்பித்தேன்...

-

No comments: