Thursday, May 29, 2008

அன்புத்தோழி...!!!



தோழி,
உன் துயரங்களுக்கு
சமாதி கட்டு
இன்றோடு......
துணிவுடன் புறப்படு.....
தூய அன்பு ஒன்றே அஸ்திரமாக....

இவுலகம் உன் வசப்படும்.....
என எனக்குச் சொன்னவள் என்தோழி....

அன்பை வாரி வழங்குகிறாள் வள்ளலைப் போல....
நானும் அவளிடம் யாசகம் கேட்க காத்திருக்கிறேன் தினமும்....

தோழி..,
உன்னிடம்
நட்பு கொண்ட பின்புதான்
வாழ்க்கையை
ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன்......
உன்னிடம்
பழகிய பிறகுதான்
பூக்களிடம்
பேச ஆரம்பித்திருக்கிறேன்......

உன் நட்பு
தகரத்தையும் தங்கமாய்
மாற்றும் வகையில்
புடம் போடுகிறது........

என்றென்றும்
நான் உன் தோழியாய்
இருப்பேன் என
ஒற்றைச் சொல்லில்
என் உலகத்தை இயங்க
வைத்த அன்புத்தோழியே...!!!

உனக்கான‌
என் வார்த்தைகளும்......
என் வாழ்த்துகளும்......
தொடர்ந்து கொண்டே இருக்குமடி...!!!