Tuesday, March 25, 2008

கடவுளின் குழந்தைகள்...!!!

இவர்களுக்கு
பெற்றோரிருந்தும் இில்லாததால்
சமூகமே பெயர் சூட்டும் ‍
அனாதை என்று...

மலர்களின்
மகரந்த சேர்க்கையில் தவறிருக்க‌
துளிர்க்கும் தளிர்களை
சமூகம் சபிப்பதென்ன நியாயம்?


வாருங்கள் தோழர் தோழியரே..

நாமும் ஒரு கை கொடுப்போம்..

இந்த பூந்தேர்களை
வாழ்க்கைப் பாதையில் இழுக்க‌
வடம் பிடிப்போம்..!!!


No comments: