Monday, December 31, 2007

உயிரே..

உன்னை உன்னை

நிலவே என்றேன்..!! நிலவே என்றேன்..!!
அம்மாவாசை ஆனாய்.... என் வாழ்வின் பெளர்ணமியானாய்...
மலரே என்றேன்..!! மலரே என்றேன்..!!
உதிர்ந்து போனாய்.... மணம் பரப்பினாய்....
அறிவே என்றேன்..!! அறிவே என்றேன்..!!
மூடனாக்கினாய்.... அறிஞனாக்கினாய்....
அன்பே என்றேன்..!! அன்பே என்றேன்..!!
இதயம் கொன்றாய்.... உனதன்பில் திளைக்க வைத்தாய்....
மின்னலே என்றேன்..!! மின்னலே என்றேன்..!!
நொடியில் மறைந்தாய்.... ஒளியையை தந்தாய்....
மயிலே என்றேன்..!! மயிலே என்றேன்..!!
சிறகொடித்தாய்.... நாட்டியமாடினாய்....
குயிலே என்றேன்..!! குயிலே என்றேன்..!!
ஊமையாக்கினாய்.... பாடகனாக்கினாய்....
வான‌மே என்றேன்..!! வான‌மே என்றேன்..!!
இடியாய் விழுந்தாய்.... மழையாய் பொழிந்தாய்....
நிறமே என்றேன்..!! நிறமே என்றேன்..!!
வெற்றிடமானாய்.... வானவில் ஆனாய்....

உன்னை..... உன்னை.....
உன்னை..... உன்னை.....

உயிரே என்று சொல்லவா? உயிரே என்று சொல்லவா?
அய்யோ..!! என்னை விட்டு என்னுள்
போய்விட்டால்...??? ஒன்றிவிடுகிறாயா?

என் தாய் தந்தையரை யார் காப்பாற்றுவது?? நீ யாரோ, எவளோ அல்ல...
வேண்டாம்... என்னவள்..!!
நீ யாரோ.. எவளோ...!!! என் உயிரானவள்...!!!!!!

(Select the above kavithai.. And read the new one alone... )

3 comments:

Dudu said...

Yella kavidayum super !
Avin :)

n_mohan said...

Interesting! unnga kavithallam romba nalla iruku!

சரிதா கிருஷ்ணன் said...

to Avin and Mohan,
Thanks.