Thursday, July 3, 2008

மரத்தாய்...


உயிர் ஆதார சுவாச காற்றைத் தருகிறாள்..
பசி தீர்க்க கனிகளால் உணவளிக்கிறாள்..
தன்மடி நிழலால் குளிரச்செய்கிறாள்..
மன அமைதியைத் தருகிறாள்..
பூந்தென்றலால் மகிழ்விக்கிறாள்..
தஞ்சம் புகுந்தவர்க்கு வஞ்சம் பாராதவள்...

தாயிலும் மாற்றாந்தாய் இங்குண்டு...

இருப்பின் அனைவருக்கும் அனைத்தும் நல்கும்
இவள் ஓர் இணையற்ற தாயாகிறாள்..

ஆயினும் இங்குபோல் எங்கும்
தாயைக் கொல்லும் மக்களை யாம் கண்டதில்லை...!!!


No comments: