Monday, July 7, 2008

எழுத்தாளன்....


இவன் எழுதுகோலில் ஏறும்
ஒரு சொட்டு மைத்துளி
ஓராயிரம் பேர்களின்
தலையெழுத்தை மாற்றவல்லது..!!!
அது நாட்டில் ஊடுருவி
நடமாடும் புல்லருவிகளை
தினம் தினம் அறுவடை
செய்யும் போர்வாள்...!!!
அது அரசியல் ஆட்சியை
அடியோடு தடம் புரட்டி
புடம் போடும்
ஆற்றல் வாய்ந்த உலைத்தீ...!!!
பிடித்திருக்கும் அவனது
கையையும் கூர்பார்க்கும்
இருமுனைக் கத்தி...!!!
உண்மை எழுதும் ஒரு எழுத்தாளனின்
உயிர்மூச்சு காற்றில் உலவும்வரை
நல்லவர் வீழ்ந்து தீயவர் எழும்
காலம் என்றும் வரப்போவதில்லை...!!!

No comments: