Friday, July 4, 2008
கவிகரு...
மேகங்கள் முட்டி சூரியன்
தேய்ந்துவிட்டதென்பதைப் போல...
கருமி தானத்தின் பெருமையை
எடுத்துச் சொல்வதைப் போல...
பெண் தனதடிமையென மைந்தன்
தாயிடம் கூறுவதைப் போல...
பித்த மயக்கத்திற்கு மலடி
மகிழ்ச்சியடைவதைப் போல...
வாய்வார்த்தையிலே மட்டும் வீரம்காட்டும்
கோழை ஆடவனைப் போல...
கருவற்ற கவிதை பொருளற்றது.. பயனற்றது..
அது கவிஞனாகிய தாய் பிரசவிக்கும்
உயிரற்ற குழந்தையைப் போன்றது...!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment