Monday, July 9, 2007

உளியின் வலி

சீரான உருவமில்லா
எத்தனையோ விதமான‌
கற்களை
கண்டிருக்கிறேன்!!

மிக கடினமான
பாறைகளையும்
கண்டிருக்கிறேன்!!

என்னை உருக்கி
உருக்கி
அவற்றிற்கு உருவம்
கொடுத்தேன்...

என்னுயிர் வலிக்க
வலிக்க‌
அவற்றிற்கு வடிவம்
கொடுத்தேன்...

இதோ இன்று அவை
விலை போகின்றன..
வருபவர்களெல்லாம்
அவற்றின் பெருமை
பேசுகிறார்கள்....

நான் ஒரு
மூலையில்...
பார்ப்பார்
யாருமில்லை...
கேட்போர்
எவருமில்லை...

இந்த உளியின்
வலியை யாரறிவார்...
என்னைப்போல
உளியே அறியும்...

ஆனாலும் நான்
சந்தோஷத்துடன்........

நான் அழிந்தாலும் என்
படைப்புகள்
எங்கோ வாழ்கின்றன...
என் புக‌ழ் ப‌ர‌ப்புகின்ற‌ன‌...
என்னாலான‌தை விட்டு
செல்கிறேன்...

ஏ ம‌னிதா...
என்னால் முடிந்த‌து
உன்னால் முடியாதா??
நீ யாரையும் செதுக்க‌
வேண்டாம்...

உன்னை நீயே
செதுக்கிகொள்...

No comments: