Monday, July 9, 2007

மீட்டாத வீணை

உன்னுள்
பொதிந்து கிடக்கும்
ஆயிரமாயிரம் சுவரங்களை
வெளிக்கொணர கைகள் இல்லையோ...

மனிதா...
உனக்குள்
பொதிந்து கிடக்கும்
ஆயிரமாயிரம் ஆற்றல்களை
வெளிக்கொணர உனக்கும்
வழிகள் இல்லையோ...

ஏன் இல்லை......

மீட்டாத‌ வீணையாக‌
முட‌ங்கி போகாதே...

ந‌ம்பிக்கை கை கொண்டு
ச‌ந்தோஷ‌ கான‌ம் வெளிவ‌ர‌
வாழ்க்கை வீணையை மீட்டு.....

வென்று காட்டு!!!

No comments: