உன் முகத்தில் என்றும்
புன்னகை பூவை மலரவிடு...
உன் பெருமை மணம் பரப்பும்
பொறுப்பை அது ஏற்றுக்கொள்ளும்...
நண்பர்களைத் தேடித்தரும்...
விரோதிகளை குறைக்கச்செய்யும்...
மதிப்பினை அதிகப்படுத்தும்...
மனதை அமைதிப்படுத்தும்...
உணர்வுகளை புதுப்பிக்கும்...
உள்ளத்தை மகிழ்விக்கும்...
நோயினை விலகிடச்செய்யும்...
இளமையை நம் வசப்படுத்தும்...
கனவுகளை உற்பத்திசெய்யும்...
புன்னகை
ஒரு தொடர்சங்கிலி போல..
முதல் வளையம்
நீ என்றால்
நீ காண்போர் எல்லாம்
அந்த சங்கிலியில்
தன்னையுமறியாமல் இணைவார்கள்...
எவ்வித இழப்புமில்லாமல்
கிடைக்கும் இத்தனையையும்
இழந்து விடாதே...
ஆம்.........
புன்னகை
நீ உயிரோடிருக்கிறாய்
என உலகுக்கு
உணர்த்தும்......
ஆதலினால் புன்னகை செய்வீர்.....
Tuesday, July 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment