நிலவு மணாளனின்
பிரிகையால் அல்லி ராணிகள்
துயருற்று முகம் கூம்பி இருக்க
சூரிய காதலனின்
வருகையால் செந்தாமரையாய் நான்
அகமும் முகமும் மலர்கிறேன்...
நிலவானது சூரியனிடம்
ஒளி பெற்று பிரதிபலிப்பதைப் போல
இவ்வுலகின் அனைத்து ஆடவர்களும்
உன் குண பண்புகளை
பிரதிபலிக்க முயன்று தோற்கிறார்கள்..
யாராலும் உன்னைப்போல் இயங்க இயலாது..
ஆம்..
நீ ஒரு சூரியகாதலன்...!!!
Thursday, April 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment