Monday, July 9, 2007

ஏக்கம்

பூத்துக்குலுங்கும்
பூக்களெல்லாம்
உனக்காகவே மலர்ந்தன
போலும்

நீ தீண்டாத பூக்களெல்லாம்
தாங்கமாட்டாத
சோகங்களுடன்!!!!

நீ வாங்கும் மூச்சுக்காற்றாக
விரும்பும் வாயுமண்டலம்
உன்னைச்சுற்றியே!!!!

நீ உடுத்தும் ஆடைகளாக
விரும்பும் பருத்திச்செடிகள்!!!!

நீ பேசும் வார்த்தைகளாக
விரும்பும் மொழிகள்
கவிநயத்துடன்!!!!

நீ நடக்கும் பாதையாக‌
விரும்பும் கடற்கரை மணல்
ஈரப்பதத்துடன்!!!!

நீ இருக்க வேண்டும் என‌
மிக விரும்பும் என் மனமும்
ஏக்கத்துடன்!!!!

1 comment:

BeePlusPlus said...

Hi Sadha,

Very simple lines but has lots of themes! Good one!!

Thanks
~Bala